Monday, June 6, 2011

இமை பேசும் கவிதை

நீளம் தாண்டாத
நீர்வாழ் தாமரை நீ;
வருசங்களின் வருகைக்காக
காத்திருந்த காலங்கள் எத்தையோ?
உள்ளமெல்லாம் றெக்கைகட்டி
ஊஞ்சலாடுகிறது நினைவுகளில்
உந்தன் பாசம் கல்ந்த அன்பு தோழி -நீ அறிவாளி
சில நேரம் கடுகடுக்கும் காந்தம்-
எப்போதும் துருதுருனு இருக்கும் சந்தம்-
உன் வாழ்க்கை இருக்கட்டும் பிறருக்கு எடுத்துக்காட்டு-
நீ வாழும் வாழ்க்கையில் உன்னை எடுத்து காட்டு-
கோகுல ராதையாய் நீ குடும்பத்தை பேச வை- தோழி
கணவனிடம் அளவோடு பேச்சை வை-
தாய் வீட்டு வாழ்க்கை வேறு- இனி
துணைவனின் குடும்பமே உனக்கு வேரு- அது
தளைக்க ஊற்று நீரு- நீ
விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்ளும் ஊற்று நீரு-
இமயத்தை இரு இதயங்கள் தொடட்டும்-
ஓரிதயம் ஈரிதயமாக சேர்ந்தால் தொட எட்டும்।
எப்போதும் காரியத்தில் கண்ணா இரு- நீயே
உன் குடும்பத்திற்கு கண் ஞாயிறு-

Friday, February 18, 2011

என்னப்பா இதெல்லாம்

கண்ணும் கண்ணும் செய்யும் அரசியல்-காதல்;
உயிரும் உடலும் செய்யும் போர் -காமம்;
பட்டாம் பூச்சியின்பார்வையில்
பயணிக்கின்ற காதல் புனிதப்படுகிறது.
மலரின் மவுனமும் அர்த்தப்படுகிறது
சிரிப்பை சுவாசமாக்கி வாழும்
சோலைவனத்தின் புருவத்தில் ஒளிந்துபேசும்
வகிடு எடுத்த கதிரவனின்
காதுகளில் விளாமல் இல்லை
பனித்துளியின் பவ்விய வெட்கம்।


வெறித்துப்போன நிழல்களின்
ஊஞ்சல் மனதில்
காற்றை நிரப்பிக்கொண்டு
கனவில் நுழைந்து
சோலைவாசமெல்லாம்
சேலை நெச நெடியே மிளிர்கின்றன।


ஆனந்தத்தில் குதிக்கின்ற‍‍-
எனது கண்கள்
சொல்லிக்கொள்வதில்லை எவரிடமும்।
குழப்பத்தில் மூழ்கி
திகைத்து நிற்கிற‌என்னிதயம்
பேசுவதில்லை
முன்பைப்போல் உன்னிடம்
காரணம் என்னவென்று அறிவாயோ?


Friday, December 10, 2010

மலர்விழி.....!

மலர்விழி
என் கல்லூரி வாழ்க்கையில் என்னை,

என் இதயத்தை பாதித்தவள்.
அவளின் ஒழுக்கமே என்னைக் கவர்ந்தது.
அவள்
மெல்லிய இதழே!
பஞ்சுக்கனி நுத‌ழே !
வாடி
என் காதல் தோட்டத்தில்
கனிரசமாய்....
பனிரசமாய்....

Tuesday, January 26, 2010


Wednesday, August 5, 2009

திரும்பாத காற்று...

தனிமையில் புலம்பும்
எனது நிழலின் சோகத்தை
பாதச்சூட்டில் தனித்துக் கொள்கிறேன்...

அய்ந்தாம் வகுப்பில்
ஆட்டோவில் சென்றபோது
நெருங்கிநெருங்கி இருந்தும் சொல்லவில்லை....

கடற்கரையில் உலாவச் சென்ற
நன்பரின் அரட்டைப்பேச்சில்
அவளைக்கூறும் போது
இருட்டு உலகமாக்கி கொண்டது இதயம்...

ஒரு நடுராத்திரியில்
மது உண்டு தூங்கிய நண்பனின்
புலம்பலில் தெரிந்தது அவனையும்
அலைக்கழித்திருப்பளோ! என்று...

மழைச்சாரலில் நனைந்த போது
தாவனியின் முந்தானையை தந்தாளே!
தலையில் இட்டுக்கொள்வதற்கு,
என்ன சொல்வதென தெரியாது
நடுங்கியது குளிரில் உள்ளம்...

தென்னைமரத்தினடியில் சோறுண்ட போது
மட்டும்தான் அவளின் டிபன்பாக்ஸில்
நான் இருப்பதைக்கண்டேன்.
சாப்பிட்டு கழுவிட்டு
முகம் பார்க்க சொன்னபோது....

காதலியா? தோழியா
தெரியாமலே இருந்தேன்.
உன்னிடம் மௌனம்காட்டிய
அந்த ஞாபகங்களில்
நெஞ்சை குத்திக்கொண்டே இருக்கின்றன...

நிச்சயிக்கப்பட்டு விட்டபோது
நீ பார்த்த ஏக்கப்பார்வையில் தெரிந்தது
நம்மிடையே வீசிய
தென்றல் இனியும் திரும்புமா என்று?

Friday, July 10, 2009

பல மணிமேகலை.....

இறைவன் படைப்பிலே!
வந்த மாற்றமோ!
இடையில் வந்த விழி ரசாயனத்தால்வந்ததோ!
கடும் தவம் தான்பூண்டிருந்தனர்- ஏனையகளைத்தனர்....
ஆனை பசியோ!
அடக்க முடியாததால்தேகத்தில் உணவிட்டு
உண்ணுகின்றனர்.....
எந்த முனிவனும் செய்யாத ஒரு மர்ம முடிச்சை
அவிழ்க்க முனையும் ஒரு அதிசய முனிவனாக வலம் வருகின்றனர்
சாலைத்தெருக்களில்.......
விழியை கழுவி யானைப்பசியை அடக்க பல மணிமேகலைகள் தெருக்களில்
சுயம்வரம் அடுப்புக்குள் தலையை
புதைத்துக்கொண்டுதான்
விறகு எரிக்க முனைகின்றனர்....
எதுவும் புரியாத பெற்றோரின்
மனதில் கிளிசரினை தடவி விட்டு
வாடிக்கையாக தான் தொடருகிறது...
மணி தெரியாமல்
திசைகாட்டும் கடிகாரங்கள்
அல்ல கலங்கரை விளக்குகளாய்
தன் முந்திக்கு படகுகளை வழியனுப்பும் ஓடம்....
நினைத்தால் நிலமை சரியாகிடும் என
நினைக்கும் அண்ணனுக்கு
நிம்மதை கெடுத்து பூபாள ராகத்தில் ஒரு
சோக வேதாந்தமாக அவளின் வாழ்க்கை
பிறருக்கு,....
கிட்டாத அட்சயப் பாத்திரத்துக்கு
அலை பாயும் பல மணிமேகலைகள்
என் கண்ணில்
நிறைகின்றன... தினமும்
பல புனையா ஓவியமாக முச்சந்தியில்...

Sunday, January 4, 2009

காற்றோடு தான்... காற்றோடு நான்...


பட்டுப்போன
மரக்கிளைகளின்
சருகுகள்...

தட்டுதடுமாறி
காலில்பட்ட‌
சருகை எடுத்தேன்...

காகிதமாய் வரலாறு
சொன்னது
சுலோகமாய்
செவியில் நின்னது..

கூலிக்கு மாரடிக்கும்
குடும்பத்தில்
வேலி இடாத வாழ்க்கை...

நடந்து வந்த
நந்தவனத்தின் ஊடே!
சிலசில‌
சில்லுவண்டிகள்...

கூட்டம்கூட்டமாய்
ஆங்காங்கே!மரத்தடியில்
மணிக்கணக்கில்
காதல் ஒலிகேட்ட‌
கன மாதங்களில்...
இரண்டு காதலர்களின்
வாழ்வில்
புயல்காற்றாய் எச்சரிக்கை
செய்தி...

கடற்கரை மனதில்
கரைபுரண்ட காதலில்
இங்கு
ஒருவனின் இருதயத்தில்
பள்ளம் விழுந்தது...

பட்டுப்போன மரத்தின்
இலைமட்டும்
பட்டுப்போகாது பனித்துளியால்
கட்டுண்டு வாழ்ந்தது...
ஒருவளின் மனதில் காதல்...

இடையில் வந்து கலக்கும்
ஆறாக‌
அவளின்
இல்வாழ்க்கையில்
கலப்பதற்கு ஆண் பேரு
அடிபட்டது...

அங்கே!
குயிலின் இதயத்தில்
குண்டுபட்டது..
இரத்தம் கண்ணீர் விட்டது...

சிவக்கும்
வெற்றிலை
வெற்றி இல்லையினு சொல்லி
சுண்ணாம்புக்காதலனை
கூட அழைத்து...

மேற்கு தொடர்ச்சி மலையை
பயமுறுத்தும்
தற்கொலை பாறைக்கு
இரு
உடலும் சேர்ந்தது...

நஞ்சுப்பாலை உண்டு
இரு
உடலும் சோர்ந்தது...

மீதமான காதலை
மட்டும்
காற்றோடு உயிர்வாழ்கிறது...
காற்றோடு தான்...
காற்றோடு நான்...

Tuesday, December 2, 2008

டிசம்பர் 6




நிச்சயம் ஒரு நாள்
நான் வருவேன்
நிம்மதி தருவேன் என
சொல்லும் இறைவன் என‌
நம்பும் ஆதிக்க மக்களே!


உனக்கும் எனக்கும்
உறவு சாவிப்பூட்ட வந்த‌
நட்சத்திரங்கள்...
அரை வட்டமாய் நல்லெண்ண‌
திட்டத்தை உடைக்கும் ஈக்களே!


வெள்ளைப்புறாக்கள்
ச‌மாதனக்கொடியோடு
இரத்தம் சிந்தி இடம் கேட்டது...


இலக்கியத்தில் ஆண்டோம்
இந்தியாவில் ஆண்டோம்
என்று என்ற‌
இனவாதமெடுக்கும்
உடைந்த ஓடுகள்தெரித்தே!
உலாவிக்கொண்டுள்ளது.....

கங்கை காவிரி
நீரில் பூத்த வெண்தாமரை
ஓடிவரும் யுத்த ரத்த வெள்ளத்தில்
செந்தாமரையாய்...
வெந்து உறைந்தது...

பறக்க விடுவோம்
பாபர்கோட்டையில்
சிவ நாமக்கொடி
அயோத்தி மாநகரில்
அல்லா மலராட்சி புரிவோம்...
வெந்த மனதை
நெய்த சமாதனக்கொடியோடு
பறக்க விடுவோம்....

Tuesday, November 25, 2008

க‌ருக‌ம‌ணி விழியாள்


எனக்குள்ளே! கொடுங்கோல் ஆட்சி
புரிந்த
விண்சென்ட்ராணி
பொன் லேண்ட் வேணி
உன்னைப்போல ஒரு கொள்ளைக்காரியயை
கண்டதில்லை

முழித்திருக்கும் போது
எண்ணெய் விட்டுஆட்டுற‌...
மனக்குழிக்குள்ளே!
உன்னை விட்டு பூட்டுற‌...
கருகமணி விழிக்குள்ளே!
என்னை வைத்து காட்டுற....

கள‌வாணி போடி
தெரியாம‌ க‌ட்டிய‌
காத‌ல் கோட்டைக்குள்
க‌ண்மூடிக்கோண்டே! வ‌ந்து
திருடிட்டு போய்விட்டாயே!

வாழ்க‌ உன் குல‌த்தொழில்
என்னிட‌ம் ‍‍:என் ம‌ன‌ம்
ஆளுக‌ உன்னை
எண்ணிதின‌ம்.....
க‌ருக‌ம‌ணி விழியாள‌?
இல்லை
க‌ருக‌ம‌ணி விழியாழா!
இசைபேசும்
கோதையாயுள்ள‌தால்...

உயர்வான'தாய்'


எரிந்து கொண்டே!
பிறர் வாழ்வில்
ஒளிகொடுக்க்ம்
ந‌ட்சதிரங்களாய் நாமும்
பிரகாசிப்போம்....

நீர்த்து உருகி
பிற்ருக்கு இருள்
விரட்டும்
மெழுகாய் நாமிருப்போம்...

தான் அழுது ஒழுகும்‍பின்
உழுவும் நழுவும் மீனும்
வாழ உதவும்
மழையாய் நாம் பொழிவோம்.....
உயர்வான'தாய்'
ஆவோம்...

வ‌த‌'இந்தி'




சிந்தனை தீர்த்தக்கரைக்கு
செவிப்பேருந்திலே!
நெடு நாளாக‌
பயணத்தொகை கொடுக்காது
பயண‌மாகிக் கொண்டே!தான்
வதந்தி...

சில சோதனையாள்ர்கள்
சில வேதனைச்சேவகர்கள்
பல சாதனைபாவகர்கள்
பலவாதனை போதகர்கள்
செய்யும் தொழில்களாக‌வே!
பார்க்கும் இட‌ ந்தோறும்
பிடிபடுகின்ற‌ன‌
ப‌ய‌ண‌ச்சீட்டை காட்டாத‌
ப‌ய‌ணி.....

ஆனாலும்
திருந்த‌வோ!
திருத்த‌வோ!‍இன்னும் ப‌ல‌
திருவ‌ள்ளுவ‌ர் வ‌ந்தாலும் ஆகாது
போல‌
நெடு நாளாக‌ எம‌தூரில்
போற்றப்ப‌ட்ட‌ தேசிய‌மொழியாக‌ எண்ணிஅ தாலோ!
வத 'இந்தி' ப‌ல‌ருக்கு
வேத‌ வ‌ந்தியாக‌
உள்ள‌து....

என் பாவமா.....?


ஓராயிரம் நினைவுகளை
சுமந்துகொண்டு
ஓராயிரம் கனவுகளோடு வாழும்
எனக்கு ஒரு வார்த்தை
உனக்கு அது வாழ்க்கை.....

வாழ்க்கையை தேர்ந்து
எடுப்பது உன்னோட குற்றாமா?
இல்லை வானவில்லின்
வர்ணங்களை வர்ணிப்ப‌து
என்னோட குற்றமா?
குற்றங்களை வாழ்க்கையாக கொண்டால்
எல்லாமே! குற்றமே!

காதல் போதையில்
மணிக்கணக்கில்
குடித்து விட்டு மயங்கி
கிடப்பது மானிடரின் குற்றமா?
குடிப்பதற்கு காரணமான
உன்னோட குற்றமா?
குடிமைப்பெண்ணே!‍உன்
கண்பார்வையில் சிக்கி தவிப்பது
என்னோட குற்றமா?
இல்லை

உன் கண்பார்வையில் விழ‌ வைத்தது
உன்னோட குற்றமா? சோகமே! வாழ்க்கையாக
உருவாக்கியது
என்னோட குற்றமா?
இல்லை
சோகத்தையே! வாழ்க்கையாக தந்தது
உன்னோட குற்றமா?யாரயும்
நேசித்து விடாதே!
உனக்கு கண்பார்வையை கொடுத்தது
ஆண்டவன் குற்றமா?
உன் கண்ணூக்குள்ளே!
என் பாவமா.....?

கண்மூடிக்கனவு........


இரவின் தனிமையில்
நிலாவின் நிழலில்
ந்ட்ச்த்திரகூட்டங்களையும்
வெண்மேகங்களையும்
வர்ணிக்கும் எனக்கு
உன்னோட ஞாபகம்......
இதமான ச‌ப்தம் கேட்ட்கும்
இந்த இரவில்
கான மழை பொழிந்து செல்லும்
கவிக்குயிலே!
உன்னோட‌ ச‌ப்தம்கேட்கும்
எனக்கு ஆனந்தம்
ஆனந்த பூங்காற்றில்
அலைந்து திரியும் ஆகாய‌ நிலவே!
உன்னுடைய நிழலில்
நான் தூங்கும்போது
தூக்கத்தை மற‌ந்து
உன்னோட ஞாபகம்.......
கலங்காத மனமும்
எடுப்பான திமிரும்
எதையும் சாதிக்கும்
துணிவும்
மொரட்டு தனமான பேச்சும்
புரியாத பாஷையில்
உன்னோட‌ ஞாபகம்.........
இது நான்
நடு இரவில்
நான் தூங்கும் போது
என்னுடைய ஞாபகம்+கனவு
கண்டுகொண்டாயா?

Tuesday, November 4, 2008

இற‌கொடித்த இயற்கை....


சின்னக்சின்னக்குழந்தைகள்
பிற‌க்கும் போது அழுகுரலிலும்
இயற்கை வட்டமிடும் வர்ணசாலையாக...

தென்றலில் தூளிகட்டி
விளையாடும் தூக்கனாங்
குருவிக்கூடும்:_ஆடும்
இயற்கையே! நாடும் நாளும்...

வண்ண வண்ண சட்டை உடுத்தும்
வண்ணத்துப்பூச்சியின்
இற‌கொடித்த முட்களில் இயற்கை...

மழலையின் விளையாட்டு
பொருளான எட்டாத ஓலை,செடி கொடியில்
அமரும்
தட்டானின் வாழ்விலும் இயற்கை...

பட்டாடை உடுத்தும்
வட்ட நிலவும்
கொட்டாவி விடும்
சொட்டுப்பனிதுளியிலும்
இயற்கை...

கட்டை வண்டி போகையிலே!
கேட்கின்ற ஜோடி மாடிகளின்
மணி ஓசையிலும்
எம்மூர் புழுதிகளின் தூற்றலிசையிலும் இயற்கை...

ம‌ந்தை மாடுகளின்
மேய்க்கின்ற் வாயசைவிலும்
கூட்ட‌ம் கூட்டமாக அணிவகுப்பிலும்
முன்னே! செல்கின்றான்....

கள்ளப்பருந்து குஞ்சை கவ்விச்செல்லும் போது
செல்லக்கோழி தாவிக்கொத்த பற‌க்கின்ற விதத்திலும்
இயற்கை...

புள்ளிவைத்து கோலம்
போடதெரியாம ,அழமுடியாம‌
தவிக்கும் நிலா வாழ்விலும் இயற்கை...

துக்கத்திலும் துயரத்திலும்
இயற்கை
சரி நிகர் சாமானமாக‌
இருக்கும் போது ஏன் மானிடா?
இயற்கைக்கு இன்னல் கொடுக்கிறாய்
வெட்டிவீழ்த்துகிறாய்
புகைமூட்டுகின்றாய்...

இய‌ற்கை எல்லாருக்கும்
ந‌ல்ல‌தை செய்யும் போது
எல்லாரும் ஏன் ந‌ல்ல‌தை செய்ய‌க்கூடாது?
செய்து பார்க்க‌லாமே!
வ‌ள‌ம் பெறுவோமே!

இயற்கையின் பயணம்

அலைகடலின்
நெடுந்தூர பயணம்
நீஅழைந்து திரியும் போது
அன்றும்‍‍ உன் நிழல் தேடி...

மணல்வெளியில் நட‌ந்து
செல்லும் போது
உன்
கால்களை உரசிசெல்லும்
அலை இயற்கையின் பயணம்...

தென்றல் அடித்துச்செல்லும்
நீ
நடந்து வந்த பாத‌ச்சுவட்டை
இதுவும் இயற்கையின்
பயணம் ஒருமித்தகணத்தோடு....

கவிபாடும் மேகம்
சுட்டெரிக்கும் பூமி
ஈர்ப்பு சக்தியால்
ஒன்று சேர்க்கும் மழை...

நான் தேடி
அலையும் போது நீ...
வருவது இல்லை
நீதேடி வரும் போது
நான் அணைவதில்லை...

கவிபாடும் மேகங்களையும்
பூமியையும் ஒன்று சேர்க்கும்
பயணமாக புறப்படும் மழையே!
இயற்கையின் காதல் பயணம்...

மேகம் பூமி
இருவரின் மனதிலும்
நிலையாக வாழ்ந்திட
நீ வரும் பாதையெல்லாம்...

பிஞ்சுக்குழ ந்தையின்
பஞ்சுவிரல் பட்ட தடத்திலே!
இணையும் இவ்வுலகம்
இயற்கயின் பயணம் தொடரும்....

Monday, November 3, 2008

உண்மைக்கான மந்திரங்கள்...


கோபபட்ட காதல் வாழ்க்கையெல்லாம்
கிழிக்கப்பட்ட ஓவியங்கள்
ச‌ந்தப்பட்ட காதல் வாழ்க்கையெல்லாம்
போற்றப்பட்ட காவியங்கள்

உழைக்காத நண்பரெல்லாம்
மக்கிபோன அமில உரங்கள்
பழக்கப்பட்ட உற‌வுகளெல்லாம்
பாசமான பைத்தியங்கள்
சமத்துவ போதிகளெல்லாம்
பிணி நீக்கும் வைத்தியங்கள்

கிறப்பட்ட இதயமெல்லாம்
எதிரொலிக்கும் கட்டிடங்கள்
போற்றப்பட்ட மனிதரெல்லாம்
வேண்டப்பட்ட விரோதங்கள்

பெற்றெடுத்த அன்னைகளெல்லாம்
இறக்கப்பட்ட கொடிக்கம்ப‌‌ங்கள்
பாதுகாத்த தன ந்தைகளெல்லாம்
தேய்ந்துபோன இயந்திரங்கள்
கற்றுகொடுத்த‌ ஆசான்களெல்லாம்
களையெடுக்கும் வயலகங்கள்

பித்துபிடித்த தெய்வமெல்லாம்
ஏமாற்றும் தந்திரங்கள்
பிறருக்காக வாழ்பவரெல்லாம்
உண்மைக்கான மந்திரங்கள்...

மண்வாசக்கடிதம்...


கால் நீட்டியவாறு
தூங்கி கொண்டிருக்கும்
எமதூரில் பல வண்டிகள்...

எத்துணையெத்துணை பந்தயங்களில்
வெற்றிவாகை சூடிய நான்
வெறும் பார்வை பொருளாக மரத்தடியில்...

இடம் மாற்றிகொண்டு செல்ல‌
உதவிய என் குடும்பம்‍ இன்று
இடமே! தெரியாத நிலையில்...

குயவனின் கைப்பட்டு
குடங்கள் பல தொடுத்தேன்
கை இல்லாத நாங்கள்...

ரணங்களுக்கும் பிணங்களுக்கும்
அவசிய ஊர்தியின் சொந்தங்கள்....

மனிதன் கண்டுபிடித்த‌
கற்கால பொருளான் எனக்கு
தற்காலத்தில் முடக்கப்பட்ட பொருளாக...

ஆனாலும்
எனது
தடங்களையே இன்று
வரலாற்று ஏடுகளாய் வகை செய்கின்றது
மனிதவாழ்க்கையை...

குதிரை,மாடுகளின் நகர்ந்து
செல்லும் வீடுகள் நாங்கள்;
வைக்கோல்,குடிசை,தகரங்கள்
குடில் பல எங்களுல் ஒற்றுமையாக...

விசுவாசமில்லாத மனிதர்கள் இலாவிட்டாலும்
புலுதிக்காற்றை தூற்றிய வண்டிகளின் பின்னே!
வாலாட்டிக்கொண்டே! நன்றி நாய்கள்!!
மற‌ந்தனர் ம‌னித‌ர்க‌ள்....

Saturday, November 1, 2008

துளிப்பா....


மனிதனை மாற்றும்
வித்தைகள்
சினிமாப்பாடல்கள்

அதிவேகமாக ஓடும்
ரயில்
கள்ளக்காதல்

காலில் கட்டுப்போட்ட‌
பசுக்கள்
பெண்கள்

பிற‌ரைப்பார்த்து
பொறாமைப்படும் கண்கள்
உடைந்த கண்ணாடி

Friday, October 31, 2008

சைவ சிங்கம்...


என்னுள் தூங்கும் சைவ சிங்கத்துக்கு
அப்ப அப்ப புல்போடும் தேவதையோ! நீ

ஒருவளிடம் இருந்து
காத்துக்கொள்ள‌
ஒருவள் பெயரை போலியாக‌
உச்சரித்தால்தான் தப்பிக்க
முடியும் போல...

இந்த கவிஞனின் போதை
கண்களில் விதை
பாவிக்கும் மலரடி.. நீ

வர்ணத்தின்
வாசல் படியின் கரையோரம்
புரையோடி ஒதுங்கி நிற்கின்ற எறும்பாய்
உன் இதயத்தில்
ஓர் சிறு
இடத்தில் தங்க இடம் தருவாயா?

ஏட்டு சுரக்காய் அல்ல‌
நீ
நாட்டு சுரக்காய்...

கவிப்பாட்டறை.....நீ


மூன்று தலைமுறைக்கு கவிகட்டுப்போட்ட
முடிகெழுவேந்தனுமிருந்தால் பாராட்ட
அடிகள் பலரும் பேசுகின்ற
பொடிகளில் எல்லாம் நுகர்கின்ற
தாடிகள் வளர்த்து கவிபுனைகின்ற
கடிகள் வைத்து எழுவது சிறப்பு
செடியின் கவிஞரின் பொருப்பு..

பால் வடிகின்ற முகமாம்
ஆழ் மனக்கின்ற அகமாம்
எம்.ஜி.ஆருக்கு முதல் பாடல் எழுதி
எம்மக்களுக்கு அரிமுகமாகிய கவிப்பெருவழுதி


உலகம் பல காரணங்களை எடுத்து
உன்னால் புகழ் பெருவதே!சிறப்பு
புவிப்பட்டறைகள் எல்லாம்நீ விடுத்த
கவிப்பாட்டறைகளால் ஓர் புதிய பிறப்பு


பலர் உங்களிடம் பாடம் கற்க வேண்டும்
எந்நாளும் எங்களின் மனதில் நிற்க வேண்டும்
செந்தூரம் பொட்டு வைத்து
செந்தமிழை மனதில் நட்டு வைத்து


உங்கள் மனதில்
இளமை கூத்தடிக்கும்
உங்கள் கவிகானத்தில்
இன்பத்தை பூட்டிவைக்கும்


முக்காலா முக்கப்புள்ளா-தமிழகத்தில்
முணுமுணுக்காத வாயே இல்ல-அப்படி
முணுமுணுக்களைன்னா வாயே இல்ல
முகுந்தா முகுந்தா -ஒரு
சுகம்தான்-எம்
கவிஞரின் அகம்தான் அகம்தான்


விளம்பரம் ஆக பலர் ஏக்கத்தோடு இருக்கையில்
உன்னில் விளம்பரம் ஆக
விளம்பரமே ஏக்கத்தொடு
இருக்கையில்
எங்களுக்காக அப்ப அப்ப
பொங்க வேண்டுமே!கவி செப்ப