Wednesday, August 5, 2009

திரும்பாத காற்று...

தனிமையில் புலம்பும்
எனது நிழலின் சோகத்தை
பாதச்சூட்டில் தனித்துக் கொள்கிறேன்...

அய்ந்தாம் வகுப்பில்
ஆட்டோவில் சென்றபோது
நெருங்கிநெருங்கி இருந்தும் சொல்லவில்லை....

கடற்கரையில் உலாவச் சென்ற
நன்பரின் அரட்டைப்பேச்சில்
அவளைக்கூறும் போது
இருட்டு உலகமாக்கி கொண்டது இதயம்...

ஒரு நடுராத்திரியில்
மது உண்டு தூங்கிய நண்பனின்
புலம்பலில் தெரிந்தது அவனையும்
அலைக்கழித்திருப்பளோ! என்று...

மழைச்சாரலில் நனைந்த போது
தாவனியின் முந்தானையை தந்தாளே!
தலையில் இட்டுக்கொள்வதற்கு,
என்ன சொல்வதென தெரியாது
நடுங்கியது குளிரில் உள்ளம்...

தென்னைமரத்தினடியில் சோறுண்ட போது
மட்டும்தான் அவளின் டிபன்பாக்ஸில்
நான் இருப்பதைக்கண்டேன்.
சாப்பிட்டு கழுவிட்டு
முகம் பார்க்க சொன்னபோது....

காதலியா? தோழியா
தெரியாமலே இருந்தேன்.
உன்னிடம் மௌனம்காட்டிய
அந்த ஞாபகங்களில்
நெஞ்சை குத்திக்கொண்டே இருக்கின்றன...

நிச்சயிக்கப்பட்டு விட்டபோது
நீ பார்த்த ஏக்கப்பார்வையில் தெரிந்தது
நம்மிடையே வீசிய
தென்றல் இனியும் திரும்புமா என்று?

No comments: