காதல் போயின்

காதல் பிரசவிக்கும் இடமெங்கும்

பூக்களின் நாவில்

இரத்தத்தின் வடுக்கள் நிறைந்திருக்கும்.

காதல் வண்டுகளின் சுவாசப்பையில்

மூச்சு வாங்கி

முணகிக்கொண்டிருக்கும்.

புதிய காதலின் புதல்வர்கள்

முளைத்துக்கொண்டேயிருப்பார்கள்.

தெறித்து விழும் இரத்தச் சுடுகாடு

எங்கும்!

காதல் போயின்

காதல் ஆவதில்லை சாதல்,

காதல்!

- வாலிதாசன், முகவை (தமிழ்நாடு)

(-வார்ப்பு இணையத்தில் வெளிவந்தது-)