காதல் பிரசவிக்கும் இடமெங்கும்
பூக்களின் நாவில்
இரத்தத்தின் வடுக்கள் நிறைந்திருக்கும்.
காதல் வண்டுகளின் சுவாசப்பையில்
மூச்சு வாங்கி
முணகிக்கொண்டிருக்கும்.
புதிய காதலின் புதல்வர்கள்
முளைத்துக்கொண்டேயிருப்பார்கள்.
தெறித்து விழும் இரத்தச் சுடுகாடு
எங்கும்!
காதல் போயின்
காதல் ஆவதில்லை சாதல்,
காதல்!
- வாலிதாசன், முகவை (தமிழ்நாடு)
(-வார்ப்பு இணையத்தில் வெளிவந்தது-)

