Friday, October 31, 2008

கவிப்பாட்டறை.....நீ


மூன்று தலைமுறைக்கு கவிகட்டுப்போட்ட
முடிகெழுவேந்தனுமிருந்தால் பாராட்ட
அடிகள் பலரும் பேசுகின்ற
பொடிகளில் எல்லாம் நுகர்கின்ற
தாடிகள் வளர்த்து கவிபுனைகின்ற
கடிகள் வைத்து எழுவது சிறப்பு
செடியின் கவிஞரின் பொருப்பு..

பால் வடிகின்ற முகமாம்
ஆழ் மனக்கின்ற அகமாம்
எம்.ஜி.ஆருக்கு முதல் பாடல் எழுதி
எம்மக்களுக்கு அரிமுகமாகிய கவிப்பெருவழுதி


உலகம் பல காரணங்களை எடுத்து
உன்னால் புகழ் பெருவதே!சிறப்பு
புவிப்பட்டறைகள் எல்லாம்நீ விடுத்த
கவிப்பாட்டறைகளால் ஓர் புதிய பிறப்பு


பலர் உங்களிடம் பாடம் கற்க வேண்டும்
எந்நாளும் எங்களின் மனதில் நிற்க வேண்டும்
செந்தூரம் பொட்டு வைத்து
செந்தமிழை மனதில் நட்டு வைத்து


உங்கள் மனதில்
இளமை கூத்தடிக்கும்
உங்கள் கவிகானத்தில்
இன்பத்தை பூட்டிவைக்கும்


முக்காலா முக்கப்புள்ளா-தமிழகத்தில்
முணுமுணுக்காத வாயே இல்ல-அப்படி
முணுமுணுக்களைன்னா வாயே இல்ல
முகுந்தா முகுந்தா -ஒரு
சுகம்தான்-எம்
கவிஞரின் அகம்தான் அகம்தான்


விளம்பரம் ஆக பலர் ஏக்கத்தோடு இருக்கையில்
உன்னில் விளம்பரம் ஆக
விளம்பரமே ஏக்கத்தொடு
இருக்கையில்
எங்களுக்காக அப்ப அப்ப
பொங்க வேண்டுமே!கவி செப்ப

No comments: