Tuesday, December 2, 2008

டிசம்பர் 6




நிச்சயம் ஒரு நாள்
நான் வருவேன்
நிம்மதி தருவேன் என
சொல்லும் இறைவன் என‌
நம்பும் ஆதிக்க மக்களே!


உனக்கும் எனக்கும்
உறவு சாவிப்பூட்ட வந்த‌
நட்சத்திரங்கள்...
அரை வட்டமாய் நல்லெண்ண‌
திட்டத்தை உடைக்கும் ஈக்களே!


வெள்ளைப்புறாக்கள்
ச‌மாதனக்கொடியோடு
இரத்தம் சிந்தி இடம் கேட்டது...


இலக்கியத்தில் ஆண்டோம்
இந்தியாவில் ஆண்டோம்
என்று என்ற‌
இனவாதமெடுக்கும்
உடைந்த ஓடுகள்தெரித்தே!
உலாவிக்கொண்டுள்ளது.....

கங்கை காவிரி
நீரில் பூத்த வெண்தாமரை
ஓடிவரும் யுத்த ரத்த வெள்ளத்தில்
செந்தாமரையாய்...
வெந்து உறைந்தது...

பறக்க விடுவோம்
பாபர்கோட்டையில்
சிவ நாமக்கொடி
அயோத்தி மாநகரில்
அல்லா மலராட்சி புரிவோம்...
வெந்த மனதை
நெய்த சமாதனக்கொடியோடு
பறக்க விடுவோம்....

Tuesday, November 25, 2008

க‌ருக‌ம‌ணி விழியாள்


எனக்குள்ளே! கொடுங்கோல் ஆட்சி
புரிந்த
விண்சென்ட்ராணி
பொன் லேண்ட் வேணி
உன்னைப்போல ஒரு கொள்ளைக்காரியயை
கண்டதில்லை

முழித்திருக்கும் போது
எண்ணெய் விட்டுஆட்டுற‌...
மனக்குழிக்குள்ளே!
உன்னை விட்டு பூட்டுற‌...
கருகமணி விழிக்குள்ளே!
என்னை வைத்து காட்டுற....

கள‌வாணி போடி
தெரியாம‌ க‌ட்டிய‌
காத‌ல் கோட்டைக்குள்
க‌ண்மூடிக்கோண்டே! வ‌ந்து
திருடிட்டு போய்விட்டாயே!

வாழ்க‌ உன் குல‌த்தொழில்
என்னிட‌ம் ‍‍:என் ம‌ன‌ம்
ஆளுக‌ உன்னை
எண்ணிதின‌ம்.....
க‌ருக‌ம‌ணி விழியாள‌?
இல்லை
க‌ருக‌ம‌ணி விழியாழா!
இசைபேசும்
கோதையாயுள்ள‌தால்...

உயர்வான'தாய்'


எரிந்து கொண்டே!
பிறர் வாழ்வில்
ஒளிகொடுக்க்ம்
ந‌ட்சதிரங்களாய் நாமும்
பிரகாசிப்போம்....

நீர்த்து உருகி
பிற்ருக்கு இருள்
விரட்டும்
மெழுகாய் நாமிருப்போம்...

தான் அழுது ஒழுகும்‍பின்
உழுவும் நழுவும் மீனும்
வாழ உதவும்
மழையாய் நாம் பொழிவோம்.....
உயர்வான'தாய்'
ஆவோம்...

வ‌த‌'இந்தி'




சிந்தனை தீர்த்தக்கரைக்கு
செவிப்பேருந்திலே!
நெடு நாளாக‌
பயணத்தொகை கொடுக்காது
பயண‌மாகிக் கொண்டே!தான்
வதந்தி...

சில சோதனையாள்ர்கள்
சில வேதனைச்சேவகர்கள்
பல சாதனைபாவகர்கள்
பலவாதனை போதகர்கள்
செய்யும் தொழில்களாக‌வே!
பார்க்கும் இட‌ ந்தோறும்
பிடிபடுகின்ற‌ன‌
ப‌ய‌ண‌ச்சீட்டை காட்டாத‌
ப‌ய‌ணி.....

ஆனாலும்
திருந்த‌வோ!
திருத்த‌வோ!‍இன்னும் ப‌ல‌
திருவ‌ள்ளுவ‌ர் வ‌ந்தாலும் ஆகாது
போல‌
நெடு நாளாக‌ எம‌தூரில்
போற்றப்ப‌ட்ட‌ தேசிய‌மொழியாக‌ எண்ணிஅ தாலோ!
வத 'இந்தி' ப‌ல‌ருக்கு
வேத‌ வ‌ந்தியாக‌
உள்ள‌து....

என் பாவமா.....?


ஓராயிரம் நினைவுகளை
சுமந்துகொண்டு
ஓராயிரம் கனவுகளோடு வாழும்
எனக்கு ஒரு வார்த்தை
உனக்கு அது வாழ்க்கை.....

வாழ்க்கையை தேர்ந்து
எடுப்பது உன்னோட குற்றாமா?
இல்லை வானவில்லின்
வர்ணங்களை வர்ணிப்ப‌து
என்னோட குற்றமா?
குற்றங்களை வாழ்க்கையாக கொண்டால்
எல்லாமே! குற்றமே!

காதல் போதையில்
மணிக்கணக்கில்
குடித்து விட்டு மயங்கி
கிடப்பது மானிடரின் குற்றமா?
குடிப்பதற்கு காரணமான
உன்னோட குற்றமா?
குடிமைப்பெண்ணே!‍உன்
கண்பார்வையில் சிக்கி தவிப்பது
என்னோட குற்றமா?
இல்லை

உன் கண்பார்வையில் விழ‌ வைத்தது
உன்னோட குற்றமா? சோகமே! வாழ்க்கையாக
உருவாக்கியது
என்னோட குற்றமா?
இல்லை
சோகத்தையே! வாழ்க்கையாக தந்தது
உன்னோட குற்றமா?யாரயும்
நேசித்து விடாதே!
உனக்கு கண்பார்வையை கொடுத்தது
ஆண்டவன் குற்றமா?
உன் கண்ணூக்குள்ளே!
என் பாவமா.....?

கண்மூடிக்கனவு........


இரவின் தனிமையில்
நிலாவின் நிழலில்
ந்ட்ச்த்திரகூட்டங்களையும்
வெண்மேகங்களையும்
வர்ணிக்கும் எனக்கு
உன்னோட ஞாபகம்......
இதமான ச‌ப்தம் கேட்ட்கும்
இந்த இரவில்
கான மழை பொழிந்து செல்லும்
கவிக்குயிலே!
உன்னோட‌ ச‌ப்தம்கேட்கும்
எனக்கு ஆனந்தம்
ஆனந்த பூங்காற்றில்
அலைந்து திரியும் ஆகாய‌ நிலவே!
உன்னுடைய நிழலில்
நான் தூங்கும்போது
தூக்கத்தை மற‌ந்து
உன்னோட ஞாபகம்.......
கலங்காத மனமும்
எடுப்பான திமிரும்
எதையும் சாதிக்கும்
துணிவும்
மொரட்டு தனமான பேச்சும்
புரியாத பாஷையில்
உன்னோட‌ ஞாபகம்.........
இது நான்
நடு இரவில்
நான் தூங்கும் போது
என்னுடைய ஞாபகம்+கனவு
கண்டுகொண்டாயா?

Tuesday, November 4, 2008

இற‌கொடித்த இயற்கை....


சின்னக்சின்னக்குழந்தைகள்
பிற‌க்கும் போது அழுகுரலிலும்
இயற்கை வட்டமிடும் வர்ணசாலையாக...

தென்றலில் தூளிகட்டி
விளையாடும் தூக்கனாங்
குருவிக்கூடும்:_ஆடும்
இயற்கையே! நாடும் நாளும்...

வண்ண வண்ண சட்டை உடுத்தும்
வண்ணத்துப்பூச்சியின்
இற‌கொடித்த முட்களில் இயற்கை...

மழலையின் விளையாட்டு
பொருளான எட்டாத ஓலை,செடி கொடியில்
அமரும்
தட்டானின் வாழ்விலும் இயற்கை...

பட்டாடை உடுத்தும்
வட்ட நிலவும்
கொட்டாவி விடும்
சொட்டுப்பனிதுளியிலும்
இயற்கை...

கட்டை வண்டி போகையிலே!
கேட்கின்ற ஜோடி மாடிகளின்
மணி ஓசையிலும்
எம்மூர் புழுதிகளின் தூற்றலிசையிலும் இயற்கை...

ம‌ந்தை மாடுகளின்
மேய்க்கின்ற் வாயசைவிலும்
கூட்ட‌ம் கூட்டமாக அணிவகுப்பிலும்
முன்னே! செல்கின்றான்....

கள்ளப்பருந்து குஞ்சை கவ்விச்செல்லும் போது
செல்லக்கோழி தாவிக்கொத்த பற‌க்கின்ற விதத்திலும்
இயற்கை...

புள்ளிவைத்து கோலம்
போடதெரியாம ,அழமுடியாம‌
தவிக்கும் நிலா வாழ்விலும் இயற்கை...

துக்கத்திலும் துயரத்திலும்
இயற்கை
சரி நிகர் சாமானமாக‌
இருக்கும் போது ஏன் மானிடா?
இயற்கைக்கு இன்னல் கொடுக்கிறாய்
வெட்டிவீழ்த்துகிறாய்
புகைமூட்டுகின்றாய்...

இய‌ற்கை எல்லாருக்கும்
ந‌ல்ல‌தை செய்யும் போது
எல்லாரும் ஏன் ந‌ல்ல‌தை செய்ய‌க்கூடாது?
செய்து பார்க்க‌லாமே!
வ‌ள‌ம் பெறுவோமே!

இயற்கையின் பயணம்

அலைகடலின்
நெடுந்தூர பயணம்
நீஅழைந்து திரியும் போது
அன்றும்‍‍ உன் நிழல் தேடி...

மணல்வெளியில் நட‌ந்து
செல்லும் போது
உன்
கால்களை உரசிசெல்லும்
அலை இயற்கையின் பயணம்...

தென்றல் அடித்துச்செல்லும்
நீ
நடந்து வந்த பாத‌ச்சுவட்டை
இதுவும் இயற்கையின்
பயணம் ஒருமித்தகணத்தோடு....

கவிபாடும் மேகம்
சுட்டெரிக்கும் பூமி
ஈர்ப்பு சக்தியால்
ஒன்று சேர்க்கும் மழை...

நான் தேடி
அலையும் போது நீ...
வருவது இல்லை
நீதேடி வரும் போது
நான் அணைவதில்லை...

கவிபாடும் மேகங்களையும்
பூமியையும் ஒன்று சேர்க்கும்
பயணமாக புறப்படும் மழையே!
இயற்கையின் காதல் பயணம்...

மேகம் பூமி
இருவரின் மனதிலும்
நிலையாக வாழ்ந்திட
நீ வரும் பாதையெல்லாம்...

பிஞ்சுக்குழ ந்தையின்
பஞ்சுவிரல் பட்ட தடத்திலே!
இணையும் இவ்வுலகம்
இயற்கயின் பயணம் தொடரும்....

Monday, November 3, 2008

உண்மைக்கான மந்திரங்கள்...


கோபபட்ட காதல் வாழ்க்கையெல்லாம்
கிழிக்கப்பட்ட ஓவியங்கள்
ச‌ந்தப்பட்ட காதல் வாழ்க்கையெல்லாம்
போற்றப்பட்ட காவியங்கள்

உழைக்காத நண்பரெல்லாம்
மக்கிபோன அமில உரங்கள்
பழக்கப்பட்ட உற‌வுகளெல்லாம்
பாசமான பைத்தியங்கள்
சமத்துவ போதிகளெல்லாம்
பிணி நீக்கும் வைத்தியங்கள்

கிறப்பட்ட இதயமெல்லாம்
எதிரொலிக்கும் கட்டிடங்கள்
போற்றப்பட்ட மனிதரெல்லாம்
வேண்டப்பட்ட விரோதங்கள்

பெற்றெடுத்த அன்னைகளெல்லாம்
இறக்கப்பட்ட கொடிக்கம்ப‌‌ங்கள்
பாதுகாத்த தன ந்தைகளெல்லாம்
தேய்ந்துபோன இயந்திரங்கள்
கற்றுகொடுத்த‌ ஆசான்களெல்லாம்
களையெடுக்கும் வயலகங்கள்

பித்துபிடித்த தெய்வமெல்லாம்
ஏமாற்றும் தந்திரங்கள்
பிறருக்காக வாழ்பவரெல்லாம்
உண்மைக்கான மந்திரங்கள்...

மண்வாசக்கடிதம்...


கால் நீட்டியவாறு
தூங்கி கொண்டிருக்கும்
எமதூரில் பல வண்டிகள்...

எத்துணையெத்துணை பந்தயங்களில்
வெற்றிவாகை சூடிய நான்
வெறும் பார்வை பொருளாக மரத்தடியில்...

இடம் மாற்றிகொண்டு செல்ல‌
உதவிய என் குடும்பம்‍ இன்று
இடமே! தெரியாத நிலையில்...

குயவனின் கைப்பட்டு
குடங்கள் பல தொடுத்தேன்
கை இல்லாத நாங்கள்...

ரணங்களுக்கும் பிணங்களுக்கும்
அவசிய ஊர்தியின் சொந்தங்கள்....

மனிதன் கண்டுபிடித்த‌
கற்கால பொருளான் எனக்கு
தற்காலத்தில் முடக்கப்பட்ட பொருளாக...

ஆனாலும்
எனது
தடங்களையே இன்று
வரலாற்று ஏடுகளாய் வகை செய்கின்றது
மனிதவாழ்க்கையை...

குதிரை,மாடுகளின் நகர்ந்து
செல்லும் வீடுகள் நாங்கள்;
வைக்கோல்,குடிசை,தகரங்கள்
குடில் பல எங்களுல் ஒற்றுமையாக...

விசுவாசமில்லாத மனிதர்கள் இலாவிட்டாலும்
புலுதிக்காற்றை தூற்றிய வண்டிகளின் பின்னே!
வாலாட்டிக்கொண்டே! நன்றி நாய்கள்!!
மற‌ந்தனர் ம‌னித‌ர்க‌ள்....

Saturday, November 1, 2008

துளிப்பா....


மனிதனை மாற்றும்
வித்தைகள்
சினிமாப்பாடல்கள்

அதிவேகமாக ஓடும்
ரயில்
கள்ளக்காதல்

காலில் கட்டுப்போட்ட‌
பசுக்கள்
பெண்கள்

பிற‌ரைப்பார்த்து
பொறாமைப்படும் கண்கள்
உடைந்த கண்ணாடி

Friday, October 31, 2008

சைவ சிங்கம்...


என்னுள் தூங்கும் சைவ சிங்கத்துக்கு
அப்ப அப்ப புல்போடும் தேவதையோ! நீ

ஒருவளிடம் இருந்து
காத்துக்கொள்ள‌
ஒருவள் பெயரை போலியாக‌
உச்சரித்தால்தான் தப்பிக்க
முடியும் போல...

இந்த கவிஞனின் போதை
கண்களில் விதை
பாவிக்கும் மலரடி.. நீ

வர்ணத்தின்
வாசல் படியின் கரையோரம்
புரையோடி ஒதுங்கி நிற்கின்ற எறும்பாய்
உன் இதயத்தில்
ஓர் சிறு
இடத்தில் தங்க இடம் தருவாயா?

ஏட்டு சுரக்காய் அல்ல‌
நீ
நாட்டு சுரக்காய்...

கவிப்பாட்டறை.....நீ


மூன்று தலைமுறைக்கு கவிகட்டுப்போட்ட
முடிகெழுவேந்தனுமிருந்தால் பாராட்ட
அடிகள் பலரும் பேசுகின்ற
பொடிகளில் எல்லாம் நுகர்கின்ற
தாடிகள் வளர்த்து கவிபுனைகின்ற
கடிகள் வைத்து எழுவது சிறப்பு
செடியின் கவிஞரின் பொருப்பு..

பால் வடிகின்ற முகமாம்
ஆழ் மனக்கின்ற அகமாம்
எம்.ஜி.ஆருக்கு முதல் பாடல் எழுதி
எம்மக்களுக்கு அரிமுகமாகிய கவிப்பெருவழுதி


உலகம் பல காரணங்களை எடுத்து
உன்னால் புகழ் பெருவதே!சிறப்பு
புவிப்பட்டறைகள் எல்லாம்நீ விடுத்த
கவிப்பாட்டறைகளால் ஓர் புதிய பிறப்பு


பலர் உங்களிடம் பாடம் கற்க வேண்டும்
எந்நாளும் எங்களின் மனதில் நிற்க வேண்டும்
செந்தூரம் பொட்டு வைத்து
செந்தமிழை மனதில் நட்டு வைத்து


உங்கள் மனதில்
இளமை கூத்தடிக்கும்
உங்கள் கவிகானத்தில்
இன்பத்தை பூட்டிவைக்கும்


முக்காலா முக்கப்புள்ளா-தமிழகத்தில்
முணுமுணுக்காத வாயே இல்ல-அப்படி
முணுமுணுக்களைன்னா வாயே இல்ல
முகுந்தா முகுந்தா -ஒரு
சுகம்தான்-எம்
கவிஞரின் அகம்தான் அகம்தான்


விளம்பரம் ஆக பலர் ஏக்கத்தோடு இருக்கையில்
உன்னில் விளம்பரம் ஆக
விளம்பரமே ஏக்கத்தொடு
இருக்கையில்
எங்களுக்காக அப்ப அப்ப
பொங்க வேண்டுமே!கவி செப்ப

உடைந்த முகம்


குஞ்சம் சொருகிய
இடுப்பிலே!
நழுவிக்கொண்டே இருந்த கைக்குழந்தை...

அம்மாவின் பசியை அறியாது
அவளின் அடிவயிரை தடவியவாறே!
வருமைச்சிறுமி...

மார்போடு அனைக்கவேண்டிய
குழந்தையன்றி
குப்பை'பை' சுமந்த பாசத்தாய்...

அழுக ஆரம்பித்தகுழந்தைக்கு
உடைந்த கண்ணாடி பாட்டில்களின்
உரசல் சத்தமே! இசைப்பாடலாய்...

தன் பசி மறைத்து-குப்பைத்
தொட்டியில் எடுத்த போட்டோவை
கொடுத்து பொய்ப்புன்னகை காட்டிய
தாயவள்...

சாலையோரத்து
உணவக விடுதின்
எச்சித்தொட்டி அருகே!
ஏக்கத்தோடு நாய்களை விரட்டியபடியே!
வீரத்தாய்...

பழங்கால மரத்தடியில்
பசியார உட்கார்ந்தது போது
விரும்பாத தென்றல் புயலாய் வந்து
மண்ணை தூவி இரைத்தது...

தன் பிஞ்சுக்கு பால்
கொடுக்கும் பரிதவிப்பிலேயே!
தாயின் எண்ணம் அலையுது...

எதுவுமே!தெரியாத கைக்குழந்தை
கையிலிருந்த
பழைய உடைந்த அன்னை தெரசாவின்முகத்தைப்பார்த்த
படியே திரியுது... (பயணம்-செப்)

தடுமாற்றம்


சிங்காரத்தென்னவன்மனதில்ஜீவனாக!
பொங்கிவழிந்துயிர்கலந்தநவவாசனை
மங்காதுநிரம்பியதுஎன் இதயப்பேரன்பே!
அங்கேனுமடைக்கலம்பொத்திபொத்திவைத்த
பாவை பூவடிபெண்ணே!இதயமென்ன நாளும்
சேவைபாவடிபாடும் உனக்காக ...

கார்மேககூந்தலுக்குள்ளே!ஜீவிதமாய்
வேர்விடவேண்டுமடிகண்ணே! வசதியோடு
ஊர்வலம்வர எண்ணாத உன்ரசனைக்கு
சொற்பூக்களால் நித்தம்பூவர்ச்சனைசெய்வேன்
குற்றமிலாவிழிக்கேனசொன்னது என்மனம்
வற்றாத சொற் கேளாததும் விம்மியதேன்?...

பொன்னே!மணியே!பொற்புடையஜீவனாம்சத்து
என்னே!ஏணிய கூற்றின்பவழக்குறைத்து
மண்ணே!வானியநாற்றம்பூத்தேனிதயத்து
கவியே!காணிக்கைநிற்காதுன்னதுடிதுடித்து
செவியே!திணிக்கும்சேலைபெண்ணாம் உன்னைநினைத்து...

அழகு ! பூச்சூடியமலருக்குஜீரணமாகாது
உழவு!
செய்த எனது வசப்பிடியில்:
பழகும்!
நெய்மணத்தரசனைப்பேச்சில்:
கழுவு!
கின்ற கண்ணொத்த காகிதப்பூவல்ல நீ...
அழுகும்!
ஆறாது நிலவு இன்னது தெரியாத பேதையல்ல நீ...
நழுவும்!
மீனிது நழுவாத மீனும் அறியாத கோதையல்ல நீ...

கண்ணாடி பட்டாம்பூச்சி நாள்:19-09-08


என் அன்புகொத்த
இதயப்பூங்காவனமே!
உன் அன்பு வேண்டுகோள்
இன்று எனக்காக...

குடும்பச்சுமைதாங்கிய
கண்ணாடி பட்டாம்பூச்சி
தடுமாறினாலும் தடம்
மாறாத சீதை வழித்தோன்றல்...

உலகத்தில் பல ஓ!-நாய்கள்
ஓலங்கலிட்டாலும் உன்
பலமுள்ள எண்ணத்துக்கு இது
களமெனப்படாதுவோ!...

கடுந்துயில் இரவும்-பெண்ணே!
வழிநெடுக என் தன்னம்பிக்கை கூற்று...

கைரேகை அழிய உழை என்பாரே!
கை அழிய உழைத்த பெண்ணின்
பை நிறையவில்லை என்னகாரணமாம்?
வைகின்றதே!ஏழுலகம் நிலைகண்டு...

ஆரமுதே!
குதித்து வந்த புயல்காற்று
குண்டக்க மண்டக்க உன்
கால்களையே கட்டி தழுவி
சாந்தமாகின்றன...

பெண்ணே!
உன் வரவுக்காக
மேகத்தூரிகைகள்
வரைந்து எடுத்தன உன்
பாத சரிகைக்கு நிகரான
சூரியசெருப்பை...

நவீன உடை வகுத்து எடுக்கும்
சாரைப்பாம்பா!-நீ
தடைகளை உடையாக
கூரை போடுபவள்...

குடும்பச்சுமைதாங்கிய
கண்ணாடி பட்டாம்பூச்சி
தடுமாறினாலும் தடம்
மாறாத சீதை வழித்தோன்றல்...
உன் வரவுக்காக...

சிவப்பு நிலா!..



சிவப்பு நிலா!..
****************


சிரிக்கின்ற
சிவப்பு நிலா!..

வானுலக தேவதை
பூலோகத்தில் யாருக்காக
அவதரித்தாளோ!

அள்ள அள்ள குறையாது
நிரம்பிவழிகின்ற இவளின்
புன்னகை... அட்சய பாத்திரமாய்..

இவளின் கருவிழிக்கு
இமைக் குடை பிடிக்கின்றதே!
என்னை விடவும்
அதிவேகமாக...

காதல் கவிதை...


விழி அழகும்
சிரிப்பு அழகுமே!-உம்
தாவனியில் இழுத்துப்போட்டது என்னை...


விம்மிக்கொண்டு இருக்கும்
சின்ன விழியே!-மெல்லத்
தாயேண்டி செல்லக்கிளியே!...


விட்டுச்செல்லும் என்
சின்னக்காகிதத்
தாள்கூட உன்னைப்பற்றியே!பேசிச் செல்கிறது


விழிச்சிறையில் எனக்கு
சிம்மாசனம் அமைத்து
தாயேன்டி என் காதல் காவலாளி..


தகாத சொல்லை நீக்கி உன்
பார்வையை என் மீது செலுத்தி
வாத்து போலமெல்ல வந்து
பாதி சிரிப்பைஎன்னிடம் காட்டி
போகாத காதலை என்னிதயத்துள் புகுத்தி
பறந்து வந்து முத்தமிட்ட மலரடி நீ..

Wednesday, October 1, 2008

வாலிதாசனின் கவிதைகள்

புதிய தமிழகத்தில் கவிபாடுவோம்அன்னைதமிழோடு அனைவரும் நாம் பேசுவோம்,
ஒவ்வொரு கவிஞனின்
லட்சியப்பாதையில்..எனது பயணம் கவிஞர் வாலியின் கவிப்பா(போ)தையில் நான் பாடிய கவிப்பாட்டு..
என் அன்புக்கவிஞர்களே! உங்கள் படைப்புகளை எனது முகவரிக்குஅனுப்புங்க ... கவிகளை நாம் பகிர்ந்துகொள்ளலாம்
கவிஞர்வாலிதசன்சி.எஸ்.சி கணினி மையம்மதுரை முதன்மைச்சாலைபல்-லக்கி பிளாசா 2 வது மாடிஇராமநாதபுரம்(மாவட்டம்)த/எண்:623501தொலைபேசி எண்:04567-220145