Friday, October 31, 2008

உடைந்த முகம்


குஞ்சம் சொருகிய
இடுப்பிலே!
நழுவிக்கொண்டே இருந்த கைக்குழந்தை...

அம்மாவின் பசியை அறியாது
அவளின் அடிவயிரை தடவியவாறே!
வருமைச்சிறுமி...

மார்போடு அனைக்கவேண்டிய
குழந்தையன்றி
குப்பை'பை' சுமந்த பாசத்தாய்...

அழுக ஆரம்பித்தகுழந்தைக்கு
உடைந்த கண்ணாடி பாட்டில்களின்
உரசல் சத்தமே! இசைப்பாடலாய்...

தன் பசி மறைத்து-குப்பைத்
தொட்டியில் எடுத்த போட்டோவை
கொடுத்து பொய்ப்புன்னகை காட்டிய
தாயவள்...

சாலையோரத்து
உணவக விடுதின்
எச்சித்தொட்டி அருகே!
ஏக்கத்தோடு நாய்களை விரட்டியபடியே!
வீரத்தாய்...

பழங்கால மரத்தடியில்
பசியார உட்கார்ந்தது போது
விரும்பாத தென்றல் புயலாய் வந்து
மண்ணை தூவி இரைத்தது...

தன் பிஞ்சுக்கு பால்
கொடுக்கும் பரிதவிப்பிலேயே!
தாயின் எண்ணம் அலையுது...

எதுவுமே!தெரியாத கைக்குழந்தை
கையிலிருந்த
பழைய உடைந்த அன்னை தெரசாவின்முகத்தைப்பார்த்த
படியே திரியுது... (பயணம்-செப்)

No comments: