
என்னுள் தூங்கும் சைவ சிங்கத்துக்கு
அப்ப அப்ப புல்போடும் தேவதையோ! நீ
ஒருவளிடம் இருந்து
காத்துக்கொள்ள
ஒருவள் பெயரை போலியாக
உச்சரித்தால்தான் தப்பிக்க
முடியும் போல...
இந்த கவிஞனின் போதை
கண்களில் விதை
பாவிக்கும் மலரடி.. நீ
வர்ணத்தின்
வாசல் படியின் கரையோரம்
புரையோடி ஒதுங்கி நிற்கின்ற எறும்பாய்
உன் இதயத்தில்
ஓர் சிறு
இடத்தில் தங்க இடம் தருவாயா?
ஏட்டு சுரக்காய் அல்ல
நீ
நாட்டு சுரக்காய்...


No comments:
Post a Comment