Tuesday, November 4, 2008

இற‌கொடித்த இயற்கை....


சின்னக்சின்னக்குழந்தைகள்
பிற‌க்கும் போது அழுகுரலிலும்
இயற்கை வட்டமிடும் வர்ணசாலையாக...

தென்றலில் தூளிகட்டி
விளையாடும் தூக்கனாங்
குருவிக்கூடும்:_ஆடும்
இயற்கையே! நாடும் நாளும்...

வண்ண வண்ண சட்டை உடுத்தும்
வண்ணத்துப்பூச்சியின்
இற‌கொடித்த முட்களில் இயற்கை...

மழலையின் விளையாட்டு
பொருளான எட்டாத ஓலை,செடி கொடியில்
அமரும்
தட்டானின் வாழ்விலும் இயற்கை...

பட்டாடை உடுத்தும்
வட்ட நிலவும்
கொட்டாவி விடும்
சொட்டுப்பனிதுளியிலும்
இயற்கை...

கட்டை வண்டி போகையிலே!
கேட்கின்ற ஜோடி மாடிகளின்
மணி ஓசையிலும்
எம்மூர் புழுதிகளின் தூற்றலிசையிலும் இயற்கை...

ம‌ந்தை மாடுகளின்
மேய்க்கின்ற் வாயசைவிலும்
கூட்ட‌ம் கூட்டமாக அணிவகுப்பிலும்
முன்னே! செல்கின்றான்....

கள்ளப்பருந்து குஞ்சை கவ்விச்செல்லும் போது
செல்லக்கோழி தாவிக்கொத்த பற‌க்கின்ற விதத்திலும்
இயற்கை...

புள்ளிவைத்து கோலம்
போடதெரியாம ,அழமுடியாம‌
தவிக்கும் நிலா வாழ்விலும் இயற்கை...

துக்கத்திலும் துயரத்திலும்
இயற்கை
சரி நிகர் சாமானமாக‌
இருக்கும் போது ஏன் மானிடா?
இயற்கைக்கு இன்னல் கொடுக்கிறாய்
வெட்டிவீழ்த்துகிறாய்
புகைமூட்டுகின்றாய்...

இய‌ற்கை எல்லாருக்கும்
ந‌ல்ல‌தை செய்யும் போது
எல்லாரும் ஏன் ந‌ல்ல‌தை செய்ய‌க்கூடாது?
செய்து பார்க்க‌லாமே!
வ‌ள‌ம் பெறுவோமே!

No comments: