
ஓராயிரம் நினைவுகளை
சுமந்துகொண்டு
ஓராயிரம் கனவுகளோடு வாழும்
எனக்கு ஒரு வார்த்தை
உனக்கு அது வாழ்க்கை.....
வாழ்க்கையை தேர்ந்து
எடுப்பது உன்னோட குற்றாமா?
இல்லை வானவில்லின்
வர்ணங்களை வர்ணிப்பது
என்னோட குற்றமா?
குற்றங்களை வாழ்க்கையாக கொண்டால்
எல்லாமே! குற்றமே!
காதல் போதையில்
மணிக்கணக்கில்
குடித்து விட்டு மயங்கி
கிடப்பது மானிடரின் குற்றமா?
குடிப்பதற்கு காரணமான
உன்னோட குற்றமா?
குடிமைப்பெண்ணே!உன்
கண்பார்வையில் சிக்கி தவிப்பது
என்னோட குற்றமா?
இல்லை
உன் கண்பார்வையில் விழ வைத்தது
உன்னோட குற்றமா? சோகமே! வாழ்க்கையாக
உருவாக்கியது
என்னோட குற்றமா?
இல்லை
சோகத்தையே! வாழ்க்கையாக தந்தது
உன்னோட குற்றமா?யாரயும்
நேசித்து விடாதே!
உனக்கு கண்பார்வையை கொடுத்தது
ஆண்டவன் குற்றமா?
உன் கண்ணூக்குள்ளே!
என் பாவமா.....?


No comments:
Post a Comment