
கால் நீட்டியவாறு
தூங்கி கொண்டிருக்கும்
எமதூரில் பல வண்டிகள்...
எத்துணையெத்துணை பந்தயங்களில்
வெற்றிவாகை சூடிய நான்
வெறும் பார்வை பொருளாக மரத்தடியில்...
இடம் மாற்றிகொண்டு செல்ல
உதவிய என் குடும்பம் இன்று
இடமே! தெரியாத நிலையில்...
குயவனின் கைப்பட்டு
குடங்கள் பல தொடுத்தேன்
கை இல்லாத நாங்கள்...
ரணங்களுக்கும் பிணங்களுக்கும்
அவசிய ஊர்தியின் சொந்தங்கள்....
மனிதன் கண்டுபிடித்த
கற்கால பொருளான் எனக்கு
தற்காலத்தில் முடக்கப்பட்ட பொருளாக...
ஆனாலும்
எனது
தடங்களையே இன்று
வரலாற்று ஏடுகளாய் வகை செய்கின்றது
மனிதவாழ்க்கையை...
குதிரை,மாடுகளின் நகர்ந்து
செல்லும் வீடுகள் நாங்கள்;
வைக்கோல்,குடிசை,தகரங்கள்
குடில் பல எங்களுல் ஒற்றுமையாக...
விசுவாசமில்லாத மனிதர்கள் இலாவிட்டாலும்
புலுதிக்காற்றை தூற்றிய வண்டிகளின் பின்னே!
வாலாட்டிக்கொண்டே! நன்றி நாய்கள்!!
மறந்தனர் மனிதர்கள்....


No comments:
Post a Comment