Friday, February 18, 2011

என்னப்பா இதெல்லாம்

கண்ணும் கண்ணும் செய்யும் அரசியல்-காதல்;
உயிரும் உடலும் செய்யும் போர் -காமம்;
பட்டாம் பூச்சியின்பார்வையில்
பயணிக்கின்ற காதல் புனிதப்படுகிறது.
மலரின் மவுனமும் அர்த்தப்படுகிறது
சிரிப்பை சுவாசமாக்கி வாழும்
சோலைவனத்தின் புருவத்தில் ஒளிந்துபேசும்
வகிடு எடுத்த கதிரவனின்
காதுகளில் விளாமல் இல்லை
பனித்துளியின் பவ்விய வெட்கம்।


வெறித்துப்போன நிழல்களின்
ஊஞ்சல் மனதில்
காற்றை நிரப்பிக்கொண்டு
கனவில் நுழைந்து
சோலைவாசமெல்லாம்
சேலை நெச நெடியே மிளிர்கின்றன।


ஆனந்தத்தில் குதிக்கின்ற‍‍-
எனது கண்கள்
சொல்லிக்கொள்வதில்லை எவரிடமும்।
குழப்பத்தில் மூழ்கி
திகைத்து நிற்கிற‌என்னிதயம்
பேசுவதில்லை
முன்பைப்போல் உன்னிடம்
காரணம் என்னவென்று அறிவாயோ?


No comments: