
பட்டுப்போன
மரக்கிளைகளின்
சருகுகள்...
தட்டுதடுமாறி
காலில்பட்ட
சருகை எடுத்தேன்...
காகிதமாய் வரலாறு
சொன்னது
சுலோகமாய்
செவியில் நின்னது..
கூலிக்கு மாரடிக்கும்
குடும்பத்தில்
வேலி இடாத வாழ்க்கை...
நடந்து வந்த
நந்தவனத்தின் ஊடே!
சிலசில
சில்லுவண்டிகள்...
கூட்டம்கூட்டமாய்
ஆங்காங்கே!மரத்தடியில்
மணிக்கணக்கில்
காதல் ஒலிகேட்ட
கன மாதங்களில்...
இரண்டு காதலர்களின்
வாழ்வில்
புயல்காற்றாய் எச்சரிக்கை
செய்தி...
கடற்கரை மனதில்
கரைபுரண்ட காதலில்
இங்கு
ஒருவனின் இருதயத்தில்
பள்ளம் விழுந்தது...
பட்டுப்போன மரத்தின்
இலைமட்டும்
பட்டுப்போகாது பனித்துளியால்
கட்டுண்டு வாழ்ந்தது...
ஒருவளின் மனதில் காதல்...
இடையில் வந்து கலக்கும்
ஆறாக
அவளின்
இல்வாழ்க்கையில்
கலப்பதற்கு ஆண் பேரு
அடிபட்டது...
அங்கே!
குயிலின் இதயத்தில்
குண்டுபட்டது..
இரத்தம் கண்ணீர் விட்டது...
சிவக்கும்
வெற்றிலை
வெற்றி இல்லையினு சொல்லி
சுண்ணாம்புக்காதலனை
கூட அழைத்து...
மேற்கு தொடர்ச்சி மலையை
பயமுறுத்தும்
தற்கொலை பாறைக்கு
இரு
உடலும் சேர்ந்தது...
நஞ்சுப்பாலை உண்டு
இரு
உடலும் சோர்ந்தது...
மீதமான காதலை
மட்டும்
காற்றோடு உயிர்வாழ்கிறது...
காற்றோடு தான்...
காற்றோடு நான்...


1 comment:
அன்பு வாலிதாசன்,
முதன்முறையாக உங்களது வலைத்தளத்தில் நான் அடியெடுத்து வைத்ததுமே அந்த முதல் "காதல் கவிதை"யில் என்னை மறந்தேன்!
அருமையான அமைப்புடன் ஒளிரும் உங்கள் இந்த வலைத்தளம் சிறக்க எனது நல்வாழ்த்துக்கள்!
- கிரிஜா மணாளன்
திருச்சி.
(செயலாளர்/திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சி 620021
www.giirijamanalanhumour.blogspot.
com
www.girijanandhahumour.blogspot.com
www.humour-garden.blogspot.com
www.tiruchikavignarkal.tamilblogs.com
www.kavithaigal.tamilblogs.com
www.smskavignarkal-world.blogspot.com
www.smspoets-tamil.blogspot.com
Post a Comment