Friday, October 31, 2008

சைவ சிங்கம்...


என்னுள் தூங்கும் சைவ சிங்கத்துக்கு
அப்ப அப்ப புல்போடும் தேவதையோ! நீ

ஒருவளிடம் இருந்து
காத்துக்கொள்ள‌
ஒருவள் பெயரை போலியாக‌
உச்சரித்தால்தான் தப்பிக்க
முடியும் போல...

இந்த கவிஞனின் போதை
கண்களில் விதை
பாவிக்கும் மலரடி.. நீ

வர்ணத்தின்
வாசல் படியின் கரையோரம்
புரையோடி ஒதுங்கி நிற்கின்ற எறும்பாய்
உன் இதயத்தில்
ஓர் சிறு
இடத்தில் தங்க இடம் தருவாயா?

ஏட்டு சுரக்காய் அல்ல‌
நீ
நாட்டு சுரக்காய்...

கவிப்பாட்டறை.....நீ


மூன்று தலைமுறைக்கு கவிகட்டுப்போட்ட
முடிகெழுவேந்தனுமிருந்தால் பாராட்ட
அடிகள் பலரும் பேசுகின்ற
பொடிகளில் எல்லாம் நுகர்கின்ற
தாடிகள் வளர்த்து கவிபுனைகின்ற
கடிகள் வைத்து எழுவது சிறப்பு
செடியின் கவிஞரின் பொருப்பு..

பால் வடிகின்ற முகமாம்
ஆழ் மனக்கின்ற அகமாம்
எம்.ஜி.ஆருக்கு முதல் பாடல் எழுதி
எம்மக்களுக்கு அரிமுகமாகிய கவிப்பெருவழுதி


உலகம் பல காரணங்களை எடுத்து
உன்னால் புகழ் பெருவதே!சிறப்பு
புவிப்பட்டறைகள் எல்லாம்நீ விடுத்த
கவிப்பாட்டறைகளால் ஓர் புதிய பிறப்பு


பலர் உங்களிடம் பாடம் கற்க வேண்டும்
எந்நாளும் எங்களின் மனதில் நிற்க வேண்டும்
செந்தூரம் பொட்டு வைத்து
செந்தமிழை மனதில் நட்டு வைத்து


உங்கள் மனதில்
இளமை கூத்தடிக்கும்
உங்கள் கவிகானத்தில்
இன்பத்தை பூட்டிவைக்கும்


முக்காலா முக்கப்புள்ளா-தமிழகத்தில்
முணுமுணுக்காத வாயே இல்ல-அப்படி
முணுமுணுக்களைன்னா வாயே இல்ல
முகுந்தா முகுந்தா -ஒரு
சுகம்தான்-எம்
கவிஞரின் அகம்தான் அகம்தான்


விளம்பரம் ஆக பலர் ஏக்கத்தோடு இருக்கையில்
உன்னில் விளம்பரம் ஆக
விளம்பரமே ஏக்கத்தொடு
இருக்கையில்
எங்களுக்காக அப்ப அப்ப
பொங்க வேண்டுமே!கவி செப்ப

உடைந்த முகம்


குஞ்சம் சொருகிய
இடுப்பிலே!
நழுவிக்கொண்டே இருந்த கைக்குழந்தை...

அம்மாவின் பசியை அறியாது
அவளின் அடிவயிரை தடவியவாறே!
வருமைச்சிறுமி...

மார்போடு அனைக்கவேண்டிய
குழந்தையன்றி
குப்பை'பை' சுமந்த பாசத்தாய்...

அழுக ஆரம்பித்தகுழந்தைக்கு
உடைந்த கண்ணாடி பாட்டில்களின்
உரசல் சத்தமே! இசைப்பாடலாய்...

தன் பசி மறைத்து-குப்பைத்
தொட்டியில் எடுத்த போட்டோவை
கொடுத்து பொய்ப்புன்னகை காட்டிய
தாயவள்...

சாலையோரத்து
உணவக விடுதின்
எச்சித்தொட்டி அருகே!
ஏக்கத்தோடு நாய்களை விரட்டியபடியே!
வீரத்தாய்...

பழங்கால மரத்தடியில்
பசியார உட்கார்ந்தது போது
விரும்பாத தென்றல் புயலாய் வந்து
மண்ணை தூவி இரைத்தது...

தன் பிஞ்சுக்கு பால்
கொடுக்கும் பரிதவிப்பிலேயே!
தாயின் எண்ணம் அலையுது...

எதுவுமே!தெரியாத கைக்குழந்தை
கையிலிருந்த
பழைய உடைந்த அன்னை தெரசாவின்முகத்தைப்பார்த்த
படியே திரியுது... (பயணம்-செப்)

தடுமாற்றம்


சிங்காரத்தென்னவன்மனதில்ஜீவனாக!
பொங்கிவழிந்துயிர்கலந்தநவவாசனை
மங்காதுநிரம்பியதுஎன் இதயப்பேரன்பே!
அங்கேனுமடைக்கலம்பொத்திபொத்திவைத்த
பாவை பூவடிபெண்ணே!இதயமென்ன நாளும்
சேவைபாவடிபாடும் உனக்காக ...

கார்மேககூந்தலுக்குள்ளே!ஜீவிதமாய்
வேர்விடவேண்டுமடிகண்ணே! வசதியோடு
ஊர்வலம்வர எண்ணாத உன்ரசனைக்கு
சொற்பூக்களால் நித்தம்பூவர்ச்சனைசெய்வேன்
குற்றமிலாவிழிக்கேனசொன்னது என்மனம்
வற்றாத சொற் கேளாததும் விம்மியதேன்?...

பொன்னே!மணியே!பொற்புடையஜீவனாம்சத்து
என்னே!ஏணிய கூற்றின்பவழக்குறைத்து
மண்ணே!வானியநாற்றம்பூத்தேனிதயத்து
கவியே!காணிக்கைநிற்காதுன்னதுடிதுடித்து
செவியே!திணிக்கும்சேலைபெண்ணாம் உன்னைநினைத்து...

அழகு ! பூச்சூடியமலருக்குஜீரணமாகாது
உழவு!
செய்த எனது வசப்பிடியில்:
பழகும்!
நெய்மணத்தரசனைப்பேச்சில்:
கழுவு!
கின்ற கண்ணொத்த காகிதப்பூவல்ல நீ...
அழுகும்!
ஆறாது நிலவு இன்னது தெரியாத பேதையல்ல நீ...
நழுவும்!
மீனிது நழுவாத மீனும் அறியாத கோதையல்ல நீ...

கண்ணாடி பட்டாம்பூச்சி நாள்:19-09-08


என் அன்புகொத்த
இதயப்பூங்காவனமே!
உன் அன்பு வேண்டுகோள்
இன்று எனக்காக...

குடும்பச்சுமைதாங்கிய
கண்ணாடி பட்டாம்பூச்சி
தடுமாறினாலும் தடம்
மாறாத சீதை வழித்தோன்றல்...

உலகத்தில் பல ஓ!-நாய்கள்
ஓலங்கலிட்டாலும் உன்
பலமுள்ள எண்ணத்துக்கு இது
களமெனப்படாதுவோ!...

கடுந்துயில் இரவும்-பெண்ணே!
வழிநெடுக என் தன்னம்பிக்கை கூற்று...

கைரேகை அழிய உழை என்பாரே!
கை அழிய உழைத்த பெண்ணின்
பை நிறையவில்லை என்னகாரணமாம்?
வைகின்றதே!ஏழுலகம் நிலைகண்டு...

ஆரமுதே!
குதித்து வந்த புயல்காற்று
குண்டக்க மண்டக்க உன்
கால்களையே கட்டி தழுவி
சாந்தமாகின்றன...

பெண்ணே!
உன் வரவுக்காக
மேகத்தூரிகைகள்
வரைந்து எடுத்தன உன்
பாத சரிகைக்கு நிகரான
சூரியசெருப்பை...

நவீன உடை வகுத்து எடுக்கும்
சாரைப்பாம்பா!-நீ
தடைகளை உடையாக
கூரை போடுபவள்...

குடும்பச்சுமைதாங்கிய
கண்ணாடி பட்டாம்பூச்சி
தடுமாறினாலும் தடம்
மாறாத சீதை வழித்தோன்றல்...
உன் வரவுக்காக...

சிவப்பு நிலா!..



சிவப்பு நிலா!..
****************


சிரிக்கின்ற
சிவப்பு நிலா!..

வானுலக தேவதை
பூலோகத்தில் யாருக்காக
அவதரித்தாளோ!

அள்ள அள்ள குறையாது
நிரம்பிவழிகின்ற இவளின்
புன்னகை... அட்சய பாத்திரமாய்..

இவளின் கருவிழிக்கு
இமைக் குடை பிடிக்கின்றதே!
என்னை விடவும்
அதிவேகமாக...

காதல் கவிதை...


விழி அழகும்
சிரிப்பு அழகுமே!-உம்
தாவனியில் இழுத்துப்போட்டது என்னை...


விம்மிக்கொண்டு இருக்கும்
சின்ன விழியே!-மெல்லத்
தாயேண்டி செல்லக்கிளியே!...


விட்டுச்செல்லும் என்
சின்னக்காகிதத்
தாள்கூட உன்னைப்பற்றியே!பேசிச் செல்கிறது


விழிச்சிறையில் எனக்கு
சிம்மாசனம் அமைத்து
தாயேன்டி என் காதல் காவலாளி..


தகாத சொல்லை நீக்கி உன்
பார்வையை என் மீது செலுத்தி
வாத்து போலமெல்ல வந்து
பாதி சிரிப்பைஎன்னிடம் காட்டி
போகாத காதலை என்னிதயத்துள் புகுத்தி
பறந்து வந்து முத்தமிட்ட மலரடி நீ..